tamilnadu

img

சிறுவனிடம் காலணியை கழட்ட சொன்ன அமைச்சர் சீனிவாசன்

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  சிறுவனிடம் காலணியை கழட்டி விட சொன்ன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  
மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம் பட்டியில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாம் நிறைவடைந்ததை தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கான முகாம் இன்று துவங்கியது. இந்த முகாமை துவக்கி வைத்த திண்டுக்கல் வனத்துறை அமைச்சர் அங்கிருந்த கோயிலுக்கு சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த ஆதிவாசி சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்றச் சொன்னார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அச்சிறுவனை செய்தியாளர்களிடம் பேச விடாமல் அப்புறப்படுத்தி உள்ளது. 
 

;