tamilnadu

img

மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து  செப்.19 தமிழகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை:
மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து  செப்டம்பர் 19 அன்று இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர்   இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மா.லெ) மாநிலச் செயலாளர்  என்.கே.நடராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றக் கூட்டம்துவங்கும் நாளான   செப்டம்பர் 14 அன்று இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டி ருந்தது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் அவர்கள் ஞாயிறன்று அதிகாலைகாலமானார். அதனையொட்டி இன்று நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் செப்டம்பர்  19 அன்று  நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு தோழர்கள் இந்தஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். நடை பெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத் தை வெற்றிகரமாக்கிட வேண்டுமென கட்சி அணிகளையும், பேராதரவு தர வேண்டுமென பொது மக்களையும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;