tamilnadu

4380 வாகனங்களில் வீடு தேடி காய்கறி விற்பனை... அமைச்சர் அறிவிப்பு....

சென்னை: 
தமிழகத்தில் 4380 வாகனங்களில் வீடுகள் தோறும் சென்றுகாய்கறி விற்பனை செய்யப்படும்  என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்‌.கே.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.

அரசு அறிவித்திருக்கும் ஒருவார கால முழு ஊரடங்கை தொடர்ந்து பொது மக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற் பனை செய்வது தொடர்பாக இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்களுடன் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.அதனைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்’ தமிழ் நாட்டிலுள்ள மக்கள் தொகை சுமார் 7 கோடி காய்கறி மற்றும் பழங்கள் தேவை தினந்தோறும் சுமார் 18,000 மெட்ரிக் டன் என எதிர்பாக்கப்படுகிறது.சென்னையை பொறுத்தவரை தினம் தோறும் 1500 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவைப்படும்.சென்னை மாநகரத்தில் மட்டும் அனைத்து மண்டலங்களிலும் 1610 வாகனங்கள் மூலம் தினந்தோறும் 1160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் 2770 வாகனங்கள் மூலம் 2228 மெட்ரிக்டன் அளவிற்கு காய் கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இப்பணிகளுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங் கள் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள் முதல் செய்து விநியோகம் செய் யப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் காய்கறிகள் மற் றும் பழங்கள் விநியோகம் தொடர் பான தகவல் தெரிந்து கொள்ள 044 2225 3884 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பயன் படுத்திக் கொள்ள  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இப்பணிகளை கண்காணிக்க தலைமையகத்தில் தோட்டக் கலை, வேளாண்மை, வேளாண்மை விற்பனைத் துறை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 194 குளிர் பதன இடங்கள் 18,527 மெட்ரிக் டன் கொள்ளளவில் உள்ளன.  அதில் தற்போழுது சுமார் 3000 மெட்ரிக் டன் மட்டுமே விளை பொருட்கள் சேமிப்பு செய்யப் பட்டுள்ளன.

மீதமுள்ள சுமார் 15527 மெட்ரிக்டன் கொள்ளளவை அருகில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்கலாம்.உள்ளாட்சித் துறை மற்றும் கூட்டுறவுத் துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.மக்களின் அன்றாட காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவையை பூர்த்தி செய்திட  முதலமைச்சர் வழங்கியுள்ள அறிவுரைப்படி தமிழகம் முழுவதும் விரிவான பல் வேறு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;