tamilnadu

img

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.96 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை, மார்ச் 5- மலேசியாவிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த மதுரையைச் சேர்ந்த சந்தானலட்சுமி(39), சென்னையைச் சேர்ந்த ஃபாத்திமா(32) ஆகியோரை சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுங்கத்துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர். இதில் சந்தானலட்சுமி மறைத்து வைத்திருந்த இரண்டு சிறிய பைகளில் 85 தங்கச் சங்கிலிகள், 17 பிரேஸ்லெட்டுகள், 2 ஆரம், 2 வளையல்கள், 13 காதணிகள், 15 மோதிரங்கள் மற்றும் 2 நெக்லஸ்களை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. 22 கேரட் தூய்மையான 2.545 கிலோ  எடையுள்ள ரூ.1.02 கோடி மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட் பதுடன், அதனை கடத்தி வந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார்.  

மற்றொரு பெண்ணான பாத்திமாவிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவரது உள்ளாடைகளில் மறைத்து கடத்திவந்த ரூ.12.59 லட்சம் மதிப்புள்ள 289 கிராம் எடையுள்ள பசை வடிவிலான தங்கமும், ரூ.5.59 லட்சம் மதிப்புள்ள 22 கேரட் தூய்மையான 139 கிராம் எடையுள்ள 3 தங்கச் சங்கிலிகள் மற்றும் 4 மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தத்தில் அவரிடமிருந்து ரூ.18.18 லட்சம் மதிப்புள்ள 428 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதேபோன்று கொழும்புவிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வந்த நிரோஷா லக்மாலி(26) என்பவரை விமான நிலைய வெளியேறும் பகுதியில் வழிமறித்து சோத னையிட்ட போது, ரூ.13.03 லட்சம் மதிப்புள்ள 299 கிராம் எடையுள்ள பசை வடிவிலான தங்கம் கைப்பற்றப்பட்டது. இது தவிர, சிங்கப்பூரிலிருந்து வந்த இண்டிகோ விமானத்தின் இரண்டு இருக்கைகளுக்கு கீழே குப்பை யாகப் போடப்பட்டிருந்த இரண்டு குழாய்களை எடுத்து சோதனையிட்டதில், அவற்றுக்குள், 24 கேரட் தூய்மை யான தலா 100 கிராம் எடையுள்ள 14 தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. 

மொத்தத்தில் ரூ.62.80 லட்சம் மதிப்புள்ள 1.4 கிலோ எடையுள்ள அந்தத் தங்கம் கைப்பற்றப்பட்டது. எனினும் இந்த தங்கத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை. மொத்தத் தில் ரூ.1.96 கோடி மதிப்புள்ள 4.672 கிலோ எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டு ஒரு பெண் பயணி கைது செய்யப் பட்டுள்ளார். இதுகுறித்து மேல் விசாரணை நடத்தி வருவதாக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;