tamilnadu

img

தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதியுதவி

தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில் முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், தமிழக அணிக்காக 1950 முதல் 1960 ஆம் ஆண்டுகளில் விளையாடிய கே.ஆர்.ராஜகோபால், நஜம் ஹூசைன், எஸ்.வி.எஸ்.மணி, பிரபாகர் ஆகியோருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் தலா ரூ.7 லட்சமும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தலா ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டது.

மேலும், சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தின் பராமரிப்பாளராக 1973 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை சிறந்த முறையில் செயல்பட்டு ஓய்வு பெற்ற கே. பார்த்தசாரதிக்கும் நிதியுதவி வழங்கப்பட்டது. 

இதற்கான காசோலையை இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

;