tamilnadu

img

ஜூலை முதல் வாரத்தில்  பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: அமைச்சர்

சென்னை:
தமிழகத்தில் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியானது.இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும். கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதாகி உள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாராகும். புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.பாடத்திட்டம் குறைக்கும் பணி நடைபெறுகிறது. சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து குறித்து முதல்வர் முடிவெடுப்பார். தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

;