tamilnadu

img

தீபாவளி:அரசுப் பேருந்துகளில் முன்பதிவு துவங்கியது  

சென்னை:
தீ
பாவளி பண்டிகையை யொட்டி அக்டோபர் 25 ஆம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசுப் பேருந்துகளில் செவ்வா யன்று முன்பதிவு துவங்கியது.தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் இருந்து 
அரசு விரைவு போக்கு வரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் 1200 பேருந்து களில் நாள்தோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.அவற்றில் பயணம் செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி அக்டோபர் 25 ஆம் தேதி சொந்த ஊருக்குசெல்பவர்களுக்கு ஆகஸ்ட் 27-ல் முன்பதிவு துவங்கியது.www.tnstc.in மற்றும் 2 தனியார் இணைய தளங்கள் மூலம் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;