tamilnadu

img

ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 உயர்வு

தமிழகத்தில் ஒரே மாதத்தில் எரிவாயு விலை ரூ.100 வரை உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி சிலிண்டர் விலை மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் அதனை நிர்ணயிக்கின்றன. அதன்படி, இம்மாதம் 4-ம் தேதி ரூ.25 ரூபாய் அதிகரித்து ரூ.735 ஆக விற்பனை செய்யப்பட்டது. பின் பிப்ரவரி 15-ல் மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.785க்கு விற்பனையானது.
இதனையடுத்து, இன்று சிலிண்டரின் விலை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால் சிலிண்டரின் விலை தற்போது ரூ.810 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரே மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.100 ஆக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 


 

;