tamilnadu

img

பாரதியாரின் நினைவு நாளான செப்-11 இனி "மகாகவி நாள்" - முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு 

சென்னை: பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் , பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி "மகாகவி நாளாக" கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், பாரதியின் பாடல்கள் , கட்டுரைகளைத் தொகுத்து "மனதில் உறுதி வேண்டும்" என்ற புத்தகமாக 37 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி,பாரதியாரின் நினைவு நாளில் மாநில அளவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்குக் கவிதை போட்டி நடத்தி , இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

 

;