tamilnadu

img

குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 

சென்னை 
'துக்ளக்' இதழின் ஆசிரியர் குருமூர்த்தியின் வீடு சென்னை மயிலாப்பூரில் உள்ளது. வீட்டின் அருகே விடுமுறை நாளான ஞாயிறன்று இருசக்கர வாகனங்களில் (மூன்று) ஆறு மர்ம நபர்கள் கையில் பெட்ரோல் குண்டுடன் சென்றுள்ளனர்.

குருமூர்த்தி வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களைப் பார்த்தவுடன் அந்த கும்பல் சிட்டாய் பறந்துவிட்டது. அந்தப் பகுதி வீடுகளில்  பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனை ஆதாரமாக வைத்து குருமூர்த்தி வீட்டில் பாதுகாப்புப் பணியிலிருந்தஇருந்த காவலர்கள் மயிலாப்பூர் காவல் துறையினர் புகார் அளித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தமிழ், ஜனா, சசி, பாபு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

;