tamilnadu

img

விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

சென்னை:
10, 11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியைக் கண்காணிக்க மண்டல வாரியாக கல்வி அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி 37 மாவட்டங்களும் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 5 மண்டலங்களுக்கும் 5 இணை இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கண்காணிப்பு அதிகாரிகள் ஜூன் 15 முதல் நடைபெறும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளையும் மேற்பார்வையிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்கள் நாகராஜமுருகன், ராஜேந்திரன், சுகன்யா, வாசு, கோபிதாஸ் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

;