tamilnadu

img

மேலும் ஒரு அமைச்சர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு....

சென்னை:
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை கூடுகிறது. இதனையடுத்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.

;