tamilnadu

img

60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி

சென்னை:
சின்னத்திரை படப்பிடிப்பில் அதிகபட்சமாக 60 பேரை வைத்து நடத்திடலாம் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பா ளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சில நிபந்தனைகளு டன் சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்குவதற்கு 2020 மே 21 அன்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.

அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், செய்தித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.தற்போது இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தென்னிந்திய திரைப் படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நடிகர், நடிகை, தொழில்நுட்பப் பணியாளர்கள் என அதிகபட்சமாக 60 பேரைக் கொண்டு சின்னத் திரை படப்பிடிப்பை 2020 மே 31ஆம் தேதிமுதல் நடத்த அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட் டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழுப் படப்பிடிப்பிற்கும்  ஒருமுறை மட்டும் முன் அனுமதி பெற வேண்டும்.

சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அதனை உறுதி செய்துகொண்டு, படப் பிடிப்புகள் நடத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

;