tamilnadu

ஒன்றிய அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் திரள வேண்டும்... கே.எஸ்.அழகிரி....

சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவின் கோரப்பிடியிலும், பொருளாதார பேரழிவினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கடுமையான தாக்குதலை பாஜக அரசு நிகழ்த்தியுள்ளது. தமிழகத்தின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது.அனைத்து வகையிலும் மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகிற அரசுக்குப் பாடம் புகட்டுகிற வகையில் ஜனநாயகம், மதச்சார் பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட்ட வியூகங் களை வகுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;