tamilnadu

img

மூழ்கும் கப்பலில் பயணிக்கும் அதிமுக

சென்னை, மார்ச் 30-திமுக தலைமையிலான மதச்சா ர்பற்ற முற்போக்கு கூட்டணியின் மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னைமண்ணடியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-பாஜக, அதிமுக, பாமக கூட்டணி மதவாதக் கூட்டணி மட்டுமல்ல; சாதி வெறிக் கூட்டணியாகும். மெகா கூட்டணி அமைத்து விட்டதாகவும், அந்த கூட்டணிதான் வெற்றி பெறப் போவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கூறுகிறார்கள்.அதிமுகதான் பெரிய கட்சி என்றால் ஏன் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை? 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தாதது ஏன்? மக்களவைக்கு தேர்தல் அறிவித்ததால் 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவது ஏன்?5 மாதங்களுக்கு முன்பு நடந்த 5 மாநில தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது.


அதிமுக - பாமகவைத் தவிர பிற மாநிலங்களில் யாரும்பாஜகவோடு கூட்டணி வைக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி யிலிருந்த கட்சிகள் கூட வெளியேறி விட்டன. ஏனென்றால் அது மூழ்கும் கப்பல் என்று அனைவருக்கும் தெரியும்.தமிழகத்திற்கு இதைச் செய்தோம், அதைச் செய்தோம் என்று மக்களிடம் கூறி மோடி வாக்கு சேகரிக்க முடியுமா? ராமதாசும், அன்புமணியும் அதிமுக, மோடிக்கு எதிராக பேசியதை மக்கள் மறந்து விடுவார்களா? அதிமுக அரசு ஊழல் அரசு என்று 17 பக்க அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சிதானே. எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை எடைபோட்டு விற்று விடுவார் எனக் கூறியதும் பாமகதானே. இப்போது எல்லா ஊழல் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதா? இதை ராமதாசும், அன்பு மணியும் தமிழக வாக்காளர்களிடம் கூறி வாக்கு கேட்கத் தயாரா? தமிழகத்தில் மொத்த மருத்துவ இடங்கள் 3,700தான்.


இதில் அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்த மாணவருக்கு கிடைத்த இடம் ஒன்றுதான். அப்படியென்றால் தமிழில் படித்தவர்கள் தேசவிரோதிகளா? பல இனம், மொழிகளை பேசக் கூடியபன்முகத் தன்மை கொண்ட நாடுஇந்தியா. ஆனால் பாஜக ஆட்சியை பிடிப்பதற்காக, ஒன்றாக வாழும் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறது. எனவே, மக்களின் ஒற்றுமையை பாதுகாக்க, சந்தர்ப்பவாத பாஜக - அதிமுக கூட் டணியை முறியடிக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.வேட்பாளர் தயாநிதிமாறன், திமுக மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், காங்கிரஸ் மூத்த தலைவர் பலராமன், சிபிஐமாவட்டச் செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி, மதிமுக மாவட்டச் செயலாளர் ஜீவன், விசிக மாவட்டச் செயலாளர் செல்லதுரை, மனிதநேய மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் அமின், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில செயலாளர் நிஜாமுதின் உள்ளிட்டோரும் பேசினர்.

;