tamilnadu

img

சீனாவில் இருந்து ஆக்சிஜன் 12 கண்டெய்னரில் தமிழகம் வருகிறது.... அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்....

சிவகாசி:
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் இன்றி தவிக்கும் நோயாளிகளுக்கு சீனாவில் இருந்து 12 கண்டெய்னர்களில் ஆக்சிஜன் கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

 சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும். சீனாவில் இருந்து 12 கண்டெய்னர்கள் மூலம் ஆக்சிஜன் தமிழகத்திற்கு வர உள்ளது. அவை தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும். இதனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு முற்றிலும் நீக்கப்படும்” என்றார்.பேட்டியின்போது சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன், சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

;