tamilnadu

மணல் கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஜூன் 3- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலூகா கானூர், கருங்குளம், சங்கட்டி, பாப்பா குடியில் உயர்நீதிமன்ற உத்த ரவை மீறி மணல் அள்ளுவதைக் கண் டித்து கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்புவனம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மணல் கொள்ளையை தடுக்க வேண் டும். உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மணல் அள்ளுவதைக் தடுக்காத அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.கே. தண்டியப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் அய்யம்பாண்டி, நீல மேகம், ஈஸ்வரன் , ஏனாதி பிரபாகரன் ஆகி யோர் கலந்துகொண்டர். ஆர்ப்பாட்டத் தின் நிறைவில் திருப்புவனம் வட்டாட்சி யர் மூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்த னர். 

;