tamilnadu

img

சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு... விதிகளை மீறினால் 6 மாதம் சிறை  

சிங்கப்பூர்
ஆசியக் கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. தற்போதைய நிலையில், அங்கு கொரோனா வைரஸால் 1100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு  5 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் வரும் 7-ஆம் தேதி முதல் அடுத்த 1 மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது எனவும்,   அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளைத் தவிர்த்து மற்ற அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள்  மூடப்படும் என அந்நாட்டின் பிரதமர் லீ சீன் லூங் அறிவித்து உள்ளார்.

மேலும் ஊரடங்கு உத்தரவை மீறுவோர்கள் மீது 6 மாத சிறைத் தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராத தொகையும் விதிக்கப்படும் என்பதால் பொதுமக்கள் அரசின் விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனச் சிங்கப்பூர் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். 

;