tamilnadu

img

எதிர்கால கல்வியை பாதுகாக்க ஒரு கையெழுத்து

கோவை, ஜூலை. 27 – 
மாணவர்களின் எதிர்கால கல்வியை பாதுகாக்க ஒரு கையெழுத்திடுங்கள் என்கிற முழக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவையில் கையெழுத்து பிரச்சாரத்தை வெள்ளியன்று துவக்கியது.
மத்திய மோடி அரசு தேசிய புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அடுத்த தலைமுறை மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மாpdனிக்கப்பட வேண்டிய இந்த கல்வி கொள்கை முற்றிலும் ஏழைஎளிய மாணவர்களை கல்விச்சாலையை விட்டு வெளியேற்றும் சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளது. கல்வியை இந்துத்துவமயப்படுத்தவும், வணிகமாக்கவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிற இந்த கல்வி கொள்கையை கண்டித்து நாடு முழுவதும் கண்டன எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெற்று வருகிறது. இதன்தொடர்ச்சியாக தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 ஆயிரம் இடங்களில் பிரச்சார இயக்கங்களும், ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்த அறைகூவல் விடுத்து பேரெழுச்சியோடு நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் ஐந்து லட்சம் கையெழுத்து என்கிற இலக்குடன் மார்க்சிஸ்ட் கட்சியின் அணிகள் இவ்வியக்கத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதன் பிரச்சார துவக்கவிழா வெள்ளியன்று பீளமேட்டையடுத்த ஹோப்காலேஜ் ஜீவா நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் பீளமேடு நகரக்குழு செயலாளர் கே.பாண்டியன் தலைமை தாங்கினார். புதிய கல்வி கொள்கையின் சூழ்ச்சிகள் குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.அமிர்தம், ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், சிங்கை நகரக்குழு செயலாளர் வி.தெய்வேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக எதிர்கால மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க ஒரு கையெழுத்து என்கிற முழக்கத்தோடு மாணவர்கள், பெற்றோர்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கையெழுத்திட்டனர். இவ்வியக்கத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.ஜெயபாலன், கே.மனோகரன், ஆர்.வேலுசாமி, அஜய்குமார் மற்றும் மேகநாதன், ஜோதிபாசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 
 

;