tamilnadu

img

அவிநாசி அருகே வேலியில் மோதி இரு மான்கள் பலி

அவிநாசி, அக். 13- அவிநாசி தெக்கலூரில் வேலியில் மோதிய இரு மான்கள் மரணம். அவிநாசி அருகே, தெக்கலுார் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே ஞாயிறன்று அதி காலை 5:30 மணியளவில் 12 மான்கள் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்தன. விடியும் வேளையில் மக்கள் கூட்டம் சேர்ந்ததால், அவற்றை சிலர் விரட்ட துவங்கினர். இத னால் தப்ப முயன்ற மான்கள் அருகில் இருந்த வேலியை தாண்டியது. இதில் இரு மான்கள் வேலியில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தன.  இதுகுறித்த திருப்பூர் வனத்துறை யினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

;