tamilnadu

முதியோர் உதவித்தொகை பெற ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகம்

பொள்ளாச்சி, ஜூன் 15- பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி யில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு ”ஸ்மார்ட் கார்டு” திட்டம் அறிமுகப்படுத்தப்படுவ தாக குடிமை பொருள் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இதுகுறித்து குடிமை பொருள் அதிகாரிகள் தெரி வித்துள்ளதாவது, கோவை மாவட்டம், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 1,919  முதியோர்கள் அரசு உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இப்பய னாளிகளுக்கு ”ஸ்மார்ட் கார்டு” திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 653 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டைக் கொண்டு, ரேசன் பொருட்கள் அரிசி, மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, பணம் உள்ளிட் டவை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.

;