tamilnadu

வெயிலில் சுருண்டு விழுந்து மாணவர் பலி

கோவை, மே 7-கோடை வெயிலில் சுருண்டு விழுந்து 9-ம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் சிவகார்த்திக் (15).அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறையை கழிக்க சிவகார்த்திக் கோவைபேரூர் செட்டிபாளையத்தில் உள்ள தாத்தா முனுசாமி வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் செவ்வாயன்று காலைசிவகார்த்திக் வெயிலில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது வெப்பம் தாங்காமல் திடீரென அவர்மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த தாத்தா- பாட்டிமற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பேரனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அங்கு சிவகார்த்திக்கை பரிசோதனை செய்தமருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாகதெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

;