tamilnadu

img

கடித்த பாம்புடன் மருத்துவமனை வந்தவரால் பரபரப்பு

கோவை, ஜூன் 12 -   கடித்த நாக பாம்பை உயிருடன் பிடித்து பையில் போட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை கள்ளிமடை  பகுதியை சேர்ந்தவர் சவுந்தி ரராஜன். பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவர்  சௌரிபாளையம் பகுதியில் நண்பர் வீட்டிற்கு வந்தபோது அங்குள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்துள் ளது. மது போதையில் இருந்த இவர் பாம்பை அடிக்க சென்றுள்ளார்.

அச்சமயம் நாக பாம்பு அவரை கையில் கடித்துள்ளது. இதனையடுத்து, அந்த பாம் பைப் பிடித்து ஒரு பையில் போட்டுக்கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார்.   பாம்பை உயிருடன் பிடித்து வந்ததை பார்த்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்த னர். இதனையடுத்து பாம்பை அரசு மருத்துவமனை ஊழியர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்த நிலை யில், அவர்கள் அந்த பாம்பை வனப்பகுதியில் விடு வித்தனர். இதனிடையே பாம்பு கடிதத்தில் காயம டைந்த  சௌந்தரராஜனுக்கு அரசு மருத்துவமனை யில் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

;