tamilnadu

img

தருமபுரி அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தருமபுரி, பிப்.26- தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் 28 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.  தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் 1989ஆம் ஆண்டு  முதல் 1992ஆம் ஆண்டு வரை பிஏ வரலாறு, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு  நிகழ்ச்சி அரசு கலைக்கல்லூரி கூடுதல் கட்டிடத்தில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும் தற் போது அரசு கலைக் கல்லூரியில் பிஏ வரலாறு பிரிவில்  பேராசிரியராக பணிபுரிந்துவரும் முருகதாஸ் வரவேற்றார். இதேபோல் இங்கு படித்து தற்போது வரலாற்றுத் துறை தலைவராக உள்ள சாரதி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப் படுத்தினார். முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் கோவிந்தராஜ் முருகேசன், சீனிவாசன், செல்லையா, முனைவர் ஜான் ஆகியோர் பங்கேற்று பல்வேறு நிகழ்வு களை பகிர்ந்து உரையாற்றினர்.  இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், வரலாற்றுத்துறை  பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவ, மாணவிகள்  உட் பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான  ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ரங்கராஜ் ,  முருகன், வழக்கறிஞர் சங்கர், ஸ்ரீகாந்த், பாபு உட்பட பலர் செய்திருந்தனர். 

;