tamilnadu

img

பிசிசிஐ புதிய தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு

இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என்று புதிய பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்ட சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசிஐ-ன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கங்குலியை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாகவும், இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் 23 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கங்குலி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, நான் தேர்தல் மூலம் தேர்வு ஆனாலும் ஒருமனதாக தேர்வு ஆனாலும் பெரிய பொறுப்பு உள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்திய கிரிக்கெட்டில், இயல்பு நிலை திரும்பும் என்றார். மேலும் அணியுடன் சேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தப்போவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 

;