tamilnadu

img

விமானத்தில் தனியாக பயணித்த 5 வயது சிறுவன்

தில்லியில் இருந்து பெங்களூருக்கு 5 வயது சிறுவன் தனியாக பயணித்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
தில்லியில் இருந்து பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை  விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் 5 வயது சிறுவன் விஹார் சர்மா தனியாக பயணம் செய்துள்ளான் விமான நிலையத்தில் சிறுவனை அழைத்துச் செல்ல வந்த சிறுவனின் தாய் இந்த தகவலை உறுதி செய்தார். எனது மகன் தனியாக விமானத்தில் பயணம் செய்துள்ளான். அவன் 3 மாதங்களுக்கு பின் மீண்டும் பெங்களூரு வந்துள்ளான் என்றார்.

;