tamilnadu

img

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல்

கரூர், ஏப்.24- கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்தார். அரவக்குறிச்சி தொகுதிக்கு மே மாதம் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வேட்புமனு தாக்கல் நடக்கிறது. இந்நிலையில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி புதனன்று (ஏப்.24) அரவக் குறிச்சி ஏவிஎம் கார்னர் பகுதியிலிருந்து ஏராளமான தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சியிடம் வேட்புமனுவை தக்கல் செய்தார்.பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படும் எனவும், பரமத்தி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும், நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

;