tamilnadu

img

எல்எல்சி விபத்து: பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்

நெய்வேலி, ஜூலை 2- நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன்  வெடித்து ஏற்பட்ட விபத்தில்  உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தி னரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வியா ழனன்று (ஜூலை 2)சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்தில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் நெய் வேலி 2- வது அனல்மின் நிலையத்தில் போராட்  டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை  சந்தித்து ஆறுதல் கூறிய கே.பாலகிருஷ் ணன், கலங்காதீர்கள். கவலைப்படாதீர்கள்  மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு உங்களுக்கு  பக்கபலமாக இருக்கும். நிர்வாகத்திடமிருந்து உரிய இழப்பீட்டை பெற்றுத்தர அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம் என்று  ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின்போது கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம், செயற்  குழு உறுப்பினர் திருஅரசு, நகரச் செயலாளர்  பாலமுருகன், பொருளாளர் அன்பழகன், நகர்  குழு உறுப்பினர்கள் முருகன், குமார், திரு வேங்கடம், மணி, அமிர்தலிங்கம், சிஐடியு சங்  கத்தின் நெய்வேலி துணைத் தலைவர் வேலாயு தம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

;