tamilnadu

img

ஐந்து மாவட்டங்களில் வைரஸ் தொற்று உச்சத்தைத் தொடும்: தலைமைச் செயலாளர் தகவல்

சென்னை:
தமிழகத்தில் அடுத்த 15 நாட்களில் 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சம் தொடும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு தலைமை செயலாளர் சண்முகம் தனியார் டிவி ஒன்றுக்கு பிரத்யேகமாக பதிலளித்தார்.

அதில் அடுத்த 15 நாட்களில் கோவை, திருவண்ணாமலை, நாகை, கடலூர், சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா உச்சம் தொடும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த மாவட்டங்களில் மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக பதிலளித்துள்ளார்.தமிழகத்தில் இதுவரை 4,80,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள் தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண் ணிக்கை 6,000 ஆக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

;