tamilnadu

img

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 234 ஆக அதிகரிப்பு

சுகாதாரத்துறைச் செயலாளர் அறிவிப்பு

சென்னை, ஏப்.1- தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 234 பேராக உயர்ந்துள்ளது. இதில்  ஒரே நாளில் 110 பேர் பாதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து சென்னையில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தில்லியில் ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 1,500 பேர் பங்கேற்றனர்.இதில் தமிழகத்துக்கு வந்தவர்கள் 1,131 பேர். இவர்களில் 515 பேர் கடந்த 2 நாட்களில் தமிழக சுகாதாரத்துறையால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரின் வீட்டில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டியும், அவர்கள் கையில் அடையாள மை வைத்தும் வீட்டு கண்காணிப்பில் வைத்துள்ளோம். இதேபோல இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் யாரேனும் தமிழகத்தில் இருந்தால் தாமாக முன்வந்து சுகாதாரத்துறையிடம் தெரிவியுங்கள். இல்லை என்றால் அவர்களது குடும்பத்தின ருக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் பரவும் அபாயம் உள்ளது. இந்த மாநாட்டுக்குச் சென்றவர்களில் 50 பேர் நேற்று ஒரேநாளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இவர்கள் இல்லாமல் 7 பேர் என மொத்தம் 110 பேர் ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த எண்ணிக்கை 234 பேராக உயர்ந் துள்ளது.

வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களி டம் தொலைபேசியில் பேசி வருகிறோம். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த வர்கள் பற்றி காவல்துறையினருடன் இணைந்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் தில்லி மாநாட்டுக்கு சென்று வந்த 515 பேரிடம் தொடர்பில் இருந்தவர்களையும் நாங்கள் அடையாளம் கண்டு வருகிறோம்.

சென்னை வணிக வளாகத்தில் வேலை செய்த அரியலூர் பெண்ணுக்கு தொடர்புடைய 500 பேரை அடையாளம் கண்டு அவர்களை யும் கண்காணிப்பில் வைத்துள்ளோம். சென்னை பிராட்வேயை சேர்ந்த பெண்ணின் மகன் வெளிநாடு சென்று திரும்பியுள்ளார். அதனால் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்க லாம். அரசு சார்பில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தில்லி மாநாடுக்கு சென்ற வர்கள் தயவு செய்து தாங்களே முன்வந்து சுகா தாரத்துறைக்கு தகவல் அளிக்கவும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேரில், நெல்லையை சேர்ந்த 22 பேரும், நாமக்கலை சேர்ந்த 18 பேரும், கன்னியாகுமரியை சேர்ந்த 4 பேரும், விழுப்புரத்தை சேர்ந்த 3 பேரும், மதுரையை சேர்ந்த 2 பேரும், தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரும் அடங்குவார்கள். இதுதவிர நேற்று 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மற்றொ ருவர் விமான நிலையத்தில் வேலை செய்யும் கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஆகும். கொரோனா ஒரு புதிய நோய், உலக சுகா தார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் பலர் பாதிக்கப்பட்டுள்ள னர். அங்கு தீவிரமாக கண்காணிப்பு பணி மற்றும் கட்டுப்படுத்துதல் திட்டப்பணி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;