சென்னை, மார்ச் 29- ஊரடங்கை மீறும் மக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட, மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊரடங்கிலிருந்து விவசாயப் பொருள் கொள்முதல் நிறுவனங்கள், உர விற்பனை நிலையங்கள், விதைகள், பூச்சிக்கொல்லி தயாரிப்பு மற்றும் பேக்கிங் நிறுவனங்கள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.