tamilnadu

img

ஊரடங்கு உத்தரவு மீறல்: 1.51 லட்சம் பேர் கைது

சென்னை, ஏப்.11- தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1,51,151 பேர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகத் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும், 1 லட்சத்து 51 ஆயிரத்து 151 பேர் கைது செய்யப்பட்டனர். 1 லட்சத்து 19 ஆயிரத்து 286 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.53,72,044  அபராதம் வசூலிக்கப்பட்டது.

;