tamilnadu

img

நிதி நெருக்கடியால் வார இறுதி நாட்களில் ஐ.நா.சபை தலைமையகம் மூடப்படுகிறது

உறுப்புநாடுகள் நிதி வழங்க மறுப்பு

நியூயார்க், அக்.19- உறுப்புநாடுகள் நிதி வழங்க மறுத்ததால், நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை யகம் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.சபை பட்ஜெட்டுக்காக பணம் வழங்கிய நாடு களின் விவரம் பற்றி ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள ஆவணத்தில், 131 உறுப்பு நாடுகள் தங்களது வழக்க மான பட்ஜெட் மதிப்பீடுகளை முழுமையாக செலுத்தி யுள்ளன என்றும் இதில் 30 நாடுகள் மட்டுமே குறிப்பிட்ட காலத்துக்குள் முழு தொகையை செலுத்தியுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் சையத் அக்பரூதின் ஐ.நா.பட்ஜெட்டுக்கான முழு தொகையை செலுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஐ.நா.சபை மிக மோசமான பண நெருக்கடியை எதிர்கொள்கிறது. இதுகுறித்து ஐ.நா. தனது டிவிட்டர் பக்கத்தில், “நியூயார்க்கில் உள்ள ஐ. நாவின் தலை மையகம் பணப்பற்றாக்குறை காரணமாக இனி வார இறுதி நாட்களில் மூடப்படும்” என்று தெரி வித்துள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.சபை தெரிவித்துள் ளது. முன்னதாக ஐ.நா. சபையில் ஏற்பட்டுள்ள பணப் பற்றாக்குறை காரணமாக கூட்டங்கள் மற்றும் மாநாடு களை ஒத்திவைத்தல், செலவுகளைக் குறைத்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் என்று அதன் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டெ ரெஸ் தெரிவித்திருந்தார்.மேலும், இந்த ஆண்டின் துவக்கத்தில் பணப் பற்றாக்குறையைப் போக்க உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், உறுப்பு நாடுகள் வழங்க மறுத்துவிட்டன என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

;