கோபி,டிச.14- கோபிசெட்டிபாளையம் அருகே நிதி நிறுவன ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் நாயக்கன்காட்டில் பிரபலநிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கடன் வசூல் பிரதிநிதியாக சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலை யில் சண்முகம் நிதிநிறுவனத்தில் பணி யாற்றிக் கொண்டிருந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் புகுந்து கையில் வைத்திருந்த பட்டாக்கத்திகளை கொண்டு சரமரியாக சண்முகத்தை வெட்டி யுள்ளனர். இதில் பயந்துபோய் சண்முகம் அலு வலகத்தை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். ஆனால் அவரை விடாமல் துரத்திய கும் பல் அலுவலகத்தின் மாடிப்படியில் வைத்து மீண்டும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்பின் அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த கோபி செட்டிபாளையம் காவல்துறையினர் சட லத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பத்தினால் அப்பகுதி யில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள் ளது.