tamilnadu

ரூ.1.40 லட்சம் மோசடி... ஒருவர் கைது

இராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ரயில்வே பீடர் சாலையில் ஏ.டி.எம்மையம் உள்ளது. இங்கு முனியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகேஸ்வரிஎன்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அங்கிருந்த இளைஞர் ஒருவர் அவருக்கு பணம் எடுக்க உதவி செய்துள்ளார். ஆனால்,செல்போனில் ரூ.1.40 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுகுறித்து, மகேஸ்வரி இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்தியகாவல்துறையினர் பணத்தை மோசடியாக ஏடிஎம்மில் இருந்த எடுத்த சிவகாசி, காமராஜர் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து (36)என்பவரை கைது செய்தனர்.

;