tamilnadu

img

‘ஓம் தரே ட்டுரு சோஹா...’ சொன்னால் கொரோனா ஓடிவிடும்... புத்தமதத் தலைவர் தலாய் லாமா உளறல்

பெய்ஜிங்:
‘ஓம் தரே ட்டுரு சோஹா’ என்றமந்திரத்தை உச்சரித்தால், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம் என்று திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்.சீனாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, இதுவரை 125 பேர் வரைபலியாகியுள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில்சீன விஞ்ஞானிகள் இரவு-பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், “கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்கள்‘ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா’என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால் மன அமைதி ஏற்படும்,கவலையில் இருந்து விடுபடலாம்... மேலும், இந்த மந்திரத்தைஉச்சரிக்கும் பட்சத்தில் கொரோனாவைரஸ் பரவுதல் கட்டுப்படுத்தப் பட்டு, அது குணமாகும்...” என்று திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.கொரோனா வைரஸைத் தடுக்க, தலாய் லாமாதான் வழிகாட்ட வேண்டும் என்று புத்த மதத்தினர் சிலர் முகநூலில் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. அதைத்தொடர்ந்தே இந்த மந்திர ஆலோசனையை, லாமா ‘பரிந்துரை’ செய்துள்ளார்.இந்த மந்திரத்தை உச்சரிப்பது போன்ற தனது வீடியோவையும் தலாய்லாமா சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

;