tamilnadu

img

டிரம்புக்கு எதிராக உலகை உலுக்கிய புகைப்படத்திற்கு சர்வதேச செய்தி புகைப்பட விருது

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனக்குரல்களை எழுப்ப வைத்த புகைப்படத்திற்கு இந்த ஆண்டிற்கான சர்வதேச செய்தி புகைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது

மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 2 ஆயிரம் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெற்றோர் கைது செய்யப்பட்டு ஓரிடத்திலும் குழந்தைகள் பல்வேறு முகாம்களிலும் அடைக்கப்பட்டனர். பெற்றோரை இழந்த குழந்தையின் வேதனையை புலிட்சர் விருது பெற்ற ஜான் மூர் என்ற தனது கேமராவில் பதிவுச் செய்திருந்தார். அந்த படத்தில் மெக்சிகோவின் கொண்டூராவில் இருந்து தனது மகள் யனெலாவுடன் அமெரிக்க எல்லையைக் கடக்க முயன்ற சாண்ட்ரா சான்செஸ் எனும் பெண்ணை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது தாயிடம் இருந்து குழந்தையை தனியாக பிரித்து நிறுத்தினர். ஆனால் அம்மாவின் முழங்காலை விட்டு நகர மறுத்து குழந்தை அழுததை ஜான் முர்ரே படம் பிடித்திருந்தார். 

அந்த புகைப்படம் ட்ரம்புக்கு எதிராக பெரும் எதிர்பலையை ஏற்படுத்தியது. எல்லைப் பிரச்சினையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் சகிப்புத் தன்மையற்ற செயலை அந்த படம் காட்டியது என்று பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில் டைம்ஸ் இதழ் ஜான் மூர்ரேவின் புகைப்படத்தை பதிவிட்டு, அமெரிக்கவுக்கு வாருங்கள். என்று அட்டைப் படத்தை வெளியிட்டு அகதிகளின் மீதான ட்ரம்பின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தது.

அகிதிகளின் குழந்தைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரிப்பது மிகக் கொடுமையான செயல் என்று அதிபர் டிரம்பின் மனைவி மெலேனியா டிரம்ப், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து எல்லைகளின் வழியே சட்டவிரோதமாக நுழையும் அகதிகளிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை பிரித்து காப்பகத்தில் தங்கவைக்கும் திட்டத்தை டெனால்ட் டிரம்ப் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மட்டுமின்றி சமூக வலை தளங்களில் பரவி உலகையே உலுக்கிய அந்த புகைப்படத்திற்கு தற்போது இந்த ஆண்டிற்கான சர்வதேச செய்தி புகைப்படத்திறக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 


;