states

img

தெலுங்கானா: கிருஸ்தவ பள்ளி மீது இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல்!

தெலுங்கானாவில் கிருஸ்தவ பள்ளி மீது இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தின் கண்ணேபள்ளி கிராமத்தில் உள்ள புனித மதர் தெரசா ஆங்கில பள்ளி வாயிலில் வைக்கப்பட்டிருந்த அன்னை தெரசா சிலை மீது கற்களை வீசி, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த இந்த கும்பல் பள்ளியின் பாதுகாவலர் அறை, அலுவலகம், முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் உள்ள அறைகளின் ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர். 
இதை அடுத்து அங்கு வந்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
 

;