states

img

7 ஆவது தேசிய அளவிலான விளையாட்டு போட்டி: கோவை அரசு கல்லூரி மாணவி தங்கம் வென்று அசத்தல்

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் கோவை அரசு கல்லூரி மாணவி கராத்தே போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனை மென்மேலும் தொடர வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வாழ்த்து தெரிவித்தார்.

கோவை வெள்ளளூர் பாலன் – அமுதா தம்பதியரின் மகள் கியூபா. கோவை அரசு கலைக்கல்லூரியில் வரலாறு அறிவியல் துறையில் இறுதியாண்டு பயின்று வருகிறார். சிறுவயது முதல் கராத்தே விளையாட்டை ஆர்வத்துடன் கற்று வருகிறார். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வெற்றிகளை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 26 ஆம்தேதி முதல் 28 ஆம்தேதிவரையில் கோவாவில் 7 ஆவது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் தமிழ்நாடு கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் தமிழகத்தில் இருந்து 152 வீரர்கள் பங்கேற்றனர். கோவை அரசு கலைக்கல்லூரியில் இருந்து இருவர் பங்கேற்றனர். இதில் 21 வயதுக்குள்ளானவர்களுக்கான கராத்தே போட்டியில் தங்கம் வென்று கியூபா சாதனை படைத்துள்ளார்.  முன்னதாக தங்கம் வென்று அசத்திய கியூபா மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வெள்ளியன்று வருகை தந்தார். இவரை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வரவேற்று பாராட்டி கௌரவித்தார். மேலும் அடுத்து நேபாளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார்.  முன்னதாகவந்த கியூபாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

 

;