states

img

மருத்துவ செலவிற்கு அஞ்சி சிறுமியை கொலை செய்த கொடூரம்

கர்நாடகாவில் மருத்துவ செலவிற்கு  அஞ்சி சிறுமியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
கர்நாடக மாநிலம் கனகபுரா பகுதியில் சங்கர், மானசா தம்பதியினருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. மாற்றுத் திறனாளியான சிறுமிக்கு அவரது குடும்பம், மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவ செலவு குறித்து யோசித்த சிறுமியின் பாட்டி மற்றும் கொள்ளுப் பாட்டி ஆகியோர் சேர்ந்து 2 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளனர். இதையடுத்து கிணற்றில் இறந்த நிலையில் மிதந்ந சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இதனையடுத்து சிறுமியின் தாயார், தந்தை, பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

;