politics

img

கம்யூனிஸ்ட் ஆயிஷா

செங்கொடி உயர்த்தி உற்சாகமாக முழக்கமிட்டு பீடுநடை போட்டு முன்னேறும் தோழர் ஆயிஷா, செங்கோட்டை விஸ்வநாதபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர். செங்கோட்டை இடைக்கமிட்டி உறுப்பினர். தனது எளிய வாழ்க்கையின் ஊடாக ஏழை மக்களுக்கு சேவை செய்கிற, மக்கள் பிரச்சனைக்காக ஓங்கி குரலெழுப்புகிற களப்போராளி. விஸ்வநாதபுரத்தில் கம்யூனிஸ்ட் ஆயிஷாவை அறியாதவர்கள் இல்லை. சிறந்த மேடைப் பேச்சாளர். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது எனக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்ற ஒரு மேடைப்பேச்சாளர், தோழர் ஆயிஷா பேசிய பின், போதுங்க அவங்க பேசியதே போதும் என்று சொல்லிவிட்டார். இந்தியாவைப் பாதுகாக்க, இதோ செங்கொடி ஏந்தி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தென்காசி தொகுதி திமுக வேட்பாளரது வெற்றிக்காக களத்தில் நிற்கும் தோழர் ஆயிஷா. அருகில் தோழர் ஆயிஷாவின் கணவர் தோழர் ஷேக்.


கே.ஜி.பாஸ்கரன்

;