politics

img

மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.... ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கண்டனம்...

ராஞ்சி:
தற்போதைய கொரோனாதொற்றுநோய் சூழலில்மாநில அரசுகளே கொரோனா தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவது நாட்டின் கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானது என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.

அனைத்து வயதினருக் கும், அனைத்துப் பயனாளிகளுக்கும் மத்திய அரசே தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் என்றும்பிரதமர் நரேந்திர மோடிக்குஅவர் கடிதம் எழுதியுள்ளார்.‘மற்ற மாநிலங்களைப் போலவே ஜார்க்கண்ட் மாநிலமும் பல்ஸ் போலியோ உள்ளிட்ட அனைத்து நோய்த் தடுப்பு திட்டங்களுக்கும் மத்திய அரசிடமிருந்தே இலவசமாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது. ஆனால், கொரோனா தடுப்பூசிகளை மட்டும் மாநிலங்கள்தான் சொந்தமாக வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தப் படுவது சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். முழு தேசமும் ஓராண்டிற்கும் மேலாக கொரோனா நெருக்கடியில் போராடி வரும் சவாலான சூழ்நிலையில், மத்திய அரசு கூட்டாட்சிகொள்கைக்கு எதிராக நிற் கிறது’ என்று ஹேமந்த் சோரன்அந்த கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார்.மேலும், தடுப்பூசி முன்னுரிமைகளை வரையறுப்பதற்கான சுதந்திரத்தை மாநிலங்களுக்கே மத்திய அரசுவழங்கவேண்டும்; இதுவேமூன்றாவது அலையை திறம்பட சமாளிப்பதற்கான வழி எனவும் தெரிவித்துள்ளார்.

;