india

img

மும்பையில் பயங்கரம்.... கும்பலால் இளம்பெண் பாலியல் வன்கொலை....

மும்பை:
புதுதில்லி நிர்பயா சம்பவம் போன்று மும்பையில் இளம் பெண் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒருவர் பிடிபட்டுள்ள நிலையில், மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

மும்பை புறநகர் பகுதியான அந்தேரி சாக்கி நாக பகுதியில் 30 வயதான இளம் பெண் ஒருவர்ரத்த காயங்களுடன் உயிருக்குபோராடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, அங்கு விரைந்த காவல்துறையினர் ஆபத்தான நிலையில் இருந்தபெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பெண்ணின் உடல் உறுப்புக்கள் சிதைக்கப்பட்டிருந்தன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வேனில் ரத்த கறைகள் இருந்ததைகண்டறிந்தனர். இதன் மூலம் அந்த பெண் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

மருத்துவ பரிசோதனையிலும் இதனை உறுதி செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். அதன்படி சந்தேகத்தின் பெயரில் மோகன் சவுகான் என்பவரை கைதுசெய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு புதுதில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி 5 பேர் கொண்டகும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. தற்போது அதே பாணியில் மும்பையிலும் இளம் பெண் கும்பல் பாலியல்வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;