india

img

நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்கான காலவரம்பு அடுத்த மாதம் முடிவடைகிறது -உச்சநீதிமன்றம் 

நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்கான கால வரம்பை நீட்டித்து அளிக்கப்பட்ட அனுமதி அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 3 ஆம் தேதி முதல் மேல்முறையீட்டு மனுக்களை வழக்கம்போல் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து 90 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் வழக்கின் தீர்ப்புகளுக்கு எதிராக 90 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, மேல்முறையீடு செய்வதற்கான நாள்களை காலவரையின்றி நீட்டித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கால வரம்பு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

;