ஐசிஐசிஐ வங்கியின் நிதி முறைகேடு வழக்கில் வீடியோகான் நிறுவனத்தின் சி.இ.ஒ வேணுகோபால் தூத் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக சுமார் ரூ.3,250 கோடி கடன் கொடுத்த வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார், கடந்த 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த முறைகேடு விவகாரம் கடந்த 2018-ஆம் ஆண்டில் அம்பலமானது என்பது குறிப்பிடத்தக்கது.