india

img

சுதந்திர தினவிழா: தில்லி - நகரங்களில் பாதுகாப்பு...

புதுதில்லி:
வருகிற ஆகஸ்ட் 15  ஆம் தேதியன்று  75- வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள்நடைபெறாமல் தடுக்க தில்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு, பகலாக காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.  உரிய அடையாள அட்டை இல்லாமல் சிம்கார்டுகள் வழங்கக் கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. எல்லையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

;