india

img

பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து தப்பிய மத்திய அமைச்சர்... வேளாண் சட்டங்களை எதிர்த்து முற்றுகைப் போராட்டம்...

சண்டிகர்:
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள- கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களை எதிர்த்து, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தில்லியின் மூன்று முக்கிய நுழைவாயில்களான திக்ரி, காஸிப்பூர், சிங்குஆகியவற்றை 130 நாட்களுக்கும் மேலாகமுற்றுகையிட்டுள்ள அவர்கள், 250 விவசாயிகள் உயிரிழந்தும், போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்து கொண்டிருக் கின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பாஜக தலைவர்கள் வீதியில்நடமாட முடியாத அளவிற்கு- விவசாயிகள் அவர்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.

அண்மையில், முக்த்சர் மாவட்டம்‘மாலவுட்’ பகுதியைச் சேர்ந்த பாஜகஎம்எல்ஏ அருண் நரங்கை முற்றுகையிட்ட விவசாயிகள், அவரைத் தாக்கி ஆடைகளைக் கிழித்தெறிந்தனர். இதனால், பஞ்சாப்பில் பாஜக தலைவர் களுக்கு தற்போது போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.இந்நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக இருக்கும் சோம் பிரகாஷ், பாஜக கட்சி கூட்டத்திற்காக, ஞாயிறன்று பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர்சாஸ்திரி நகருக்கு வந்த நிலையில், அவரும் விவசாயிகளிடம் சிக்கிக் கொண் டார். விவசாயிகள் அவரையும் முற்றுகையிட முயன்றனர். இதைக்கண்டு அவர்அலுவலகத்திற்குள் ஓடவே, விவசாயிகளும் அவரை விரட்டி வந்தனர். சாலைத்தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறினர். ஆனால், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, அமைச்சரை அவர்களிடமிருந்து தப்பவைத்தனர். எனினும், வேளாண் சட்டங்களையும், பாஜக அரசையும் கண்டித்து முழக்கமிட்டு, விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

;