india

img

பக்ரீத் பண்டிகை.... பாக்., வங்கதேச எல்லைகளில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட இந்திய ராணுவத்தினர்...

புதுதில்லி:
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு  பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் இந்தியராணுவத்தினர் அந்நாட்டு ராணுவத்தினரு டன்  வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.இஸ்லாமியர்களின் ஈகைத்திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை ஜூலை 21 புதன்கிழமையன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி  ராஜஸ்தானில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையான பர்மரில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸுடன் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.இந்திய-வங்கதேச எல்லையான ஃபுல்பரி யில், வங்கதேச எல்லைப் படையினருடன் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வாழ்த்துக்களையும்,  இனிப்பையும் பரிமாறிக் கொண்டனர்.

;