games

img

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள் 

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சிவ தாபா, ஆகாஷ் சங்வான் ஆகியோர் தொடக்கச் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆசியப் போட்டியில் 5 முறை பதக்கம் வென்றவரான சிவ தாபா  (63.5 கிலோ), 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் கென்யாவின் விக்டா் நியாதேராவை வீழ்த்தினார். இவர், தனது அடுத்த சுற்றில் சியரா லியோன் நாட்டைச் சேர்ந்த ஜான் பிரவுனை எதிர்கொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து,  67 கிலோ பிரிவு முதல் சுற்றில் ஆகாஷ் சங்வான் 5-0 என்ற கணக்கில் துருக்கியின் ஃபா்கான் அடேமை தோற்கடித்தார். நடப்பு தேசிய சாம்பியனான ஆகாஷ் தனது அடுத்த சுற்றில் ஜொ்மனியின் டேனியல் குரோட்டரை சந்திக்கிறார். 

 

;