election2021

img

வெற்றிக்கு நானும் எனது கட்சியினரும் அயராது உழைப்போம்.... முன்னாள் திமுக எம்எல்ஏ உறுதி.....

நான் உள்ளிட்ட பலர் திமுக சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமையிடம் விருப்ப மனு கொடுத்திருந்தோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால் ஆரம்பத்தில் எங்களுக்கு சிறு சங்கடம் இருந்தது உண்மைதான். வரப்போவது திமுக ஆட்சி என்பது உறுதியாகிவிட்டது. எங்கள் கட்சி தமிழகத்தை ஆளப்போகிறது. எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகப்போகிறார். அதுதான் எங்களுக்கு முக்கியம். கடந்த பல ஆண்டுகளாக உழைப்பாளி மக்களுக்காக பாடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சின்னத்துரை இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். ஒரு சாமான்ய குடும்பத்திலிருந்து வந்த சின்னத்துரை சட்டமன்றத்திற்கு செல்ல இருக்கிறார். அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வது இந்தத் தொகுதி வாக்காளர்களின் கடமை. அவரது வெற்றிக்கு நானும் எனது கட்சியினரும் அயராது உழைப்போம்.

கந்தர்வகோட்டையில் சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னதுரை வேட்புமனு தாக்கல் பேரணி நிறைவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் பேசியதிலிருந்து...

;